கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5000 பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், 5000 பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை மசக்காளிபாளையம் சாலையில் நடைபெற்றது.

கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

 

இதில் பயனாளர்களுக்கு தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி மற்றும் கிரைண்டர் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமைக்கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழகச் செயலாளர்கள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.