கோவையில் இன்றும் , நாளையும் மழை தொடரும் – வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம்

கோவையில் இன்றும்(25.09.18) நாளையும்(26.09.18) தூறல் மழை பெய்யும் என வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. கோவையில் வரும் 30 ஆம் தேதி வரை தென்மேற்கு பருவமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இந்நிலையில் இன்றும், நாளையும் கோவையில் தூறல் மழை பெய்யும் எனவும் பகல் நேர வெப்பநிலை 32 முதல் 34 டிகிரி செல்சியசாகவும், இருக்கும். காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் பயிர்களில் நீர் மற்றும் சத்துக்கள் உறிஞ்சுவது குறைவாக காணப்படும் என கூறப்பட்டு உள்ளது. தழைச்சத்து உரங்களை வேப்பம் புண்ணாக்குடன் கலந்து இடுவதன் மூலம் பயிர்களின் சத்துக்கள் உபயோகிப்புத் திறனை அதிகரிக்கலாம் என வேளாண் காலநிலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.