கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நாளை சிறுதானிய உணவு கண்காட்சி.

கோவை மே 23-

கோவை தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை (24.05.2023) சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி பல்கலைக்கழக அண்ணா அரங்கில் நடைபெறவுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் முனைவர் சி.சமயமூர்த்தி அவர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் திரு.கிராந்தி குமார் பாடி அவர்கள், தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி அவர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாளை 24.05.2023 காலை 09.30 மணிக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கின் அருகில் உள்ள சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சியினை மாண்புமிகு தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைக்கவுள்ளார்.

அதனை தொடர்ந்து பல்கலைக்கழக அண்ணா அரங்கில் சர்வதேச சிறுதானிய கருதரங்கானது நடைபெறும்.