ஜி.வி.பிரகாஷின் முதல் நேரடி இசை நிகழ்ச்சி கோவையில்!

கோவையில், பிரபல இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் முதல் நேரடி இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியை எம்.கே. என்டர்டெயின்மென்ட், அன்னபூர்ணா மசாலா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்த உள்ளது.

இந்நிகழ்ச்சி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் எம்.கே என்டர்டைன்மென்ட் நிர்வாக இயக்குனர் மணிகண்டன் கூறுகையில், கோவையில் வரும் மே 27ஆம் தேதி பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற இசை கச்சேரி கொடிசியா மைதானத்தில் மாலை 6:00 மணி முதல் பிரம்மாண்டமாக நடத்த உள்ளோம்.

இந்த இசை கச்சேரியில் இவருடன்  இணைந்து பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்வேதா மோகன், ஹரிணி, சைந்தவி, திப்பு திவாகர், சத்திய பிரகாஷ், வேல்முருகன், மற்றும் பலர் பாட உள்ளனர். மேலும் பிரபல நடன இயக்குனர் சாண்டி குழுவினர் நடனமாடுகின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலிருந்து முக்கிய திரை பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிகழ்ச்சி குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறுகையில், இது எனது முதல் லைவ் நிகழ்ச்சி. அதை கோவையில் நடத்துவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 2006ல் இருந்து இசை அமைத்து வருகிறேன். கோவையில் நடைபெறும் இசை நிகழ்ச்சி சிறப்பான நிகழ்வாக இருக்கும். ரெக்கார்டிங்கில் இருந்து வேறுபட்டு நேரில் பாடும் உனர்வு எப்படி இருக்கும் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை தருகிறது. இந்த நிகழ்வில் 40 முதல் 45 பாடல்கள் பாடப்பட உள்ளன. லைவ்வில் சினிமாவில் கேட்டதை விட சிறப்பாக இருக்கும். தமிழ்படல்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை பே.டி.எம் இன்சைடர், ஸ்போர்பி மற்றும் புக் மை ஷோ செயலிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.