கோவை மாநகராட்சி, சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் கோவை மாநகராட்சி மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து வெளிச்சம் திட்டத்தின்கீழ் கட்டணமில்லா சிறப்பு கண் சிகிச்சை மருத்துவ முகாமினை திங்கட்கிழமை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், சங்கரா மருத்துவமனை நிர்வாகி மற்றும் மேலாண்மை இயக்குநர் ரமணி, வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், பொதுசுகாதாரக் குழுத்தலைவர் மாரிச்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள், உதவி ஆணையர் மோகனசுந்தரி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் உள்ளனர்.