கோவையில் சந்திரமாரி சர்வதேச பள்ளி துவக்கம்

கோவை காளப்பட்டி பகுதியில் சந்திரமாரி சர்வதேச பள்ளி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பள்ளியை துவக்கி வைத்தார்.

கௌரவ விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கீதா கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் பள்ளியின் தலைவர் முரளி குமார், தாளாளர் சுமதி முரளி குமார், முதல்வர் பிரேமா முரளிதரன், நிர்வாக அறங்காவலர் சுரேஷ்பாபு, கலைவாணி தனுஷ்கோடி, தலைமை செயல் இயக்குனர் விஜய் சந்துரு ஆகியோர் பங்கேற்றனர்.