சி.ஆர்.எஸ். விருது வழங்கும் விழா 

கோவை வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்கள், சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளைக் குழு மற்றும் ராக் அமைப்பு இணைந்து ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் திட்டம் துவக்க விழா மற்றும் சி.ஆர்.எஸ். விருது வழங்கும் விழா சனிக்கிழமை கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மணி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரிக்கல் நிறுவனத்தின் நிறுவனர் விஜயமோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

சிறந்த நிறுவன உருவாக்கத்திற்கான சி.ஆர்.எஸ். விருது, ஜோஹோ கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

பின்னர் மாணவ மாணவிகளுக்கு பள்ளிக் கல்வி முதல், கல்லூரிக் கல்வி வரையிலான நீண்டகால கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் சி.ஆர்.எஸ் மெமோரியல் ப்ராஜெக்ட் கமீட்டீ-யின் தலைவர் ஏ.வி.வரதராஜன், ராக் (RAAC) நிறுவனத்தின் நிறுவனர் ஜி.சௌதரராஜன், கோவை மாநகராட்சியின் ஆணையாளர் பிரதாப், காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கோவையின் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.