ஜெயலலிதா பிறந்தநாள்: அவரது சிலைக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் இன்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்தும் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் இதய தெய்வம் மாளிகையில் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். கோவை முன்னாள் மேயர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.