கோவையில் காணாமல் போன செல்போன்கள் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

கோவை மாவட்டத்தில் பொது மக்களிடம் இருந்து திருடப்படும் மற்றும் பொதுமக்கள் தவறவிடும் செல்போன்கள் அவ்வப்போது மாவட்ட கண்காணிப்பாளர் முன்னிலையில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று சுமார் 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான 104 செல்போன்களை உரிமையாளரிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்டத்தில் காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றவியல் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பேசினார்.