கே.பி.ஆர். மில்லிற்கு தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வருகை

கே.பி.ஆர் பெண்பணியாளர் கல்விப்பிரிவிற்கு தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆறுமுகம் வருகை புரிந்தார். கே.பி.ஆர் மில் லிமிடெட் துணை தலைவர் சோமசுந்தரம் வரவேற்புரை வழங்கினார்.

கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி. ராமசாமி இந்நிகழ்விற்கு ஊக்கமளித்தார். பெண்பணியாளர் கல்விப்பிரிவின் முதல்வர் சரவணபாண்டி பெண்பணியாளருக்குத் தொழில் சார் கல்வியை வழங்கிட துணைவேந்தரை கேட்டுக்கொண்டார்.

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரியின் சி.இ பாலுசாமி, கல்லுாரியின் முதல்வர் கீதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

துணைவேந்தர் ஆறுமுகம், கற்போர் கல்வி மையம், சமுதாயக் கல்லுாரி ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடினார். அவர் தமது உரையில் பெண்பணியாளர்களுக்குத் தொழில் சார் பட்டயப் படிப்புகளை கொணர்வது குறித்து ஆலோசனை வழங்கினார்.