இந்துஸ்தான் கல்லூரியில் அரசு ஊழியர்களுக்கு சதுரங்கப் போட்டி

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான அரசு ஊழியர்களின் சதுரங்கப்போட்டி நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட இப்போட்டியில் அரசு துறை சார்ந்த ஊழியர்கள் பங்கேற்றனர். போட்டி கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன் நடுவர்களால் நடத்தப்பட்டது. கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.

இப்போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

ஆண்கள் பிரிவில் ராஜகுமார், அரசு மேல்நிலைப்பள்ளி ஆணைகட்டி முதலிடமும், கிருஷ்ணமூர்த்தி, கார்ப்பரேஷன் எஸ்.அர்.பி.அம்மணியம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் இரண்டாமிடமும். சுகநாதபிரியன், கார்ப்பரேஷன் துறை, டவுன்ஹால் மூன்றாமிடமும் பெற்றனர்.

பெண்கள் பிரிவில் ராதாமணி, பீளமேடு கார்ப்பரேஷன் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், தேவி. அரசு கவர்மெண்ட் காலேஜ் ஆப் டெக்னாலஜி இரண்டாமிடமும், ரேவதி. கார்ப்பரேஷன் எலிமெண்டரி ஸ்கூல், கணபதி மூன்றாவது இடமும் வெற்றி பெற்றனர்.