ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கருத்தரங்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மையியல் துறைகளின் சார்பில் “டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் வலிமையை அறிதல் மற்றும் பயன்படுத்துதல்” என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

மாநாட்டின் சிறப்பம்சத்தைக் கல்லூரி முதல்வர் சித்ரா விளக்கினார். தொடர்ந்து கோவை ஐஎக்ஸ்எல்ஒய் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சைலேஷ் குமார் “அடுத்த தலைமுறை டிஜிட்டல் மார்கெட்டராக மாறுவதற்குத் தேவையான திறன்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

ஹேப்பி வேலி வணிகவியல் கல்லூரியின் இயக்குநர் பினா “ஃப்ளைவீல் “மார்க்கெட்டிங்கிற்கான டிஜிட்டல் கருவிகளை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து மலேசியாவின் டெய்லர் பல்கலைக்கழகத்தின் சுற்றுலாத்துறைக் கல்லூரியின் மூத்த பேராசிரியர் கீ வெய் சியா வீடியோ கான்பரன்சிங் முறையில் “சுற்றுலாத் துறையில் டிஜிட்டல் மாற்றம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கருத்தரங்கம் தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை வழங்கினர். அவற்றுள் சிறந்த கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.