நேரு சர்வதேச பள்ளியில் ஆண்டு விழா

நேரு சர்வதேச பள்ளியில் முதலாம் ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. கோவை சி. ஆர். பி. எப் பயிற்சி மையத்தின் காவல்துறை தலைவர் அஜய் பரதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவைத் துவக்கி வைத்தார்.

பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் தனபால் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும் விழாவில் நேரு கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குநரும், வழக்குரைஞருமான கிருஷ்ணதாஸ், முதன்மை நிர்வாக அதிகாரி கிருஷ்ண குமார், நேரு கிட்ஸ் அகாடமி மற்றும் நேரு சர்வதேச பள்ளியின் தாளாளர் சைதன்யா கிருஷ்ண குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றின.