திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.
புதிதாக ஆளுநரை நியமித்தும் ஆளுநர்களை மாற்றம் செய்தும் குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் படி ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார் என குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர், தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்துள்ளதோடு, இரண்டு முறை கோவை தொகுதி மக்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.