ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் பொங்கல் விழா

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவினை கல்லூரி முதல்வர் பழனியம்மாள் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார். தமிழர் பாரம்பரியப்படி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் இணைந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.

விழாவில் கும்மி அடித்தல், சிலம்பாட்டம் மற்றும் கயிறு இழுத்தல், உரி அடித்தல் விளையாட்டுகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.