ரேவதி பிசியோதெரபி கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

அவிநாசியில் அமைந்துள்ள ரேவதி கல்வி நிறுவனங்களின் ஓர் அங்கமான ரேவதி பிசியோதெரபி கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை ரேவதி கல்வி நிறுவனங்களின் அறங்காவலர்கள் ஈஸ்வரமூர்த்தி, ரேவதி, விஷ்ணு ராகவ், அஸ்வதி ராகவ் ஆகியோர் துவக்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்,விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.