போதை பொருள் விற்பனை செய்வோரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை

– முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், போதைப் பொருட்களை விற்பனை செய்வோரை கண்டறிந்து அவர்களின் சொத்துக்களை முடக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.