தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளதாகவும் , ஒரிரு இடங்களில் கனமழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டு உள்ளது.