ஆதாருடன் 92.26 லட்சம் மின் நுகர்வோர் எண் இணைப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் இதுவரை (12.12.2022 தேதி படி) 92.26 லட்சம் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்வாரியம் மின்நுகர்வோர் அவர்களது மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள 2,811 பிரிவு அலுலகங்களில் வரும் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்நிலையில், இதுவரை (நேற்று வரை) 92.26 லட்சம் மின்நுகர்வோர், ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.