ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் கடன் வழங்கும் முகாம்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் மாபெரும் கடன் வழங்கும் முகாம் இந்த வாரம் டிசம்பர் 15 மற்றும் 16-ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கோவை ரயில் நிலையம் அருகில் குறிஞ்சி காம்ப்ளக்சில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வளாகத்தில் நடைபெறுகிறது.

இக்கண்காட்சியினை பார்வையிடுவதற்கான அனுமதி இலவசம். கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைக்கிறார்.

இந்த மாபெரும் கடன் முகாமில், அரசு நிதி உதவி பெறும் திட்டங்களுக்கான கடன், இளம் தொழில் முனைவோருக்கான Standup India & Mudra திட்டங்கள், மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்துடன் கூடிய PMEGP, NEEDS முதலான திட்டங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் திட்டங்கள், விவசாய அபிவிருத்தி திட்டங்கள், வேளாண் உட்கட்டமைப்பு திட்டங்கள், பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள், மாணவர்களுக்கான கல்விக் கடன் மற்றும் ஏராளமான அரசு கடன் திட்டங்களின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. கடன் முகாமில் தகுதி பெற்றவருக்கு உடனடி கடன் ஒப்புதல்கள் வழங்கப்படும்.