பாரதியார் நினைவு நூற்றாண்டு நூல் வெளியீடு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு நூல்களையும், பாரதியார் பாடல்கள் அடங்கிய இசைப்பேழையினையும் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் சி.ஏ.வாசுகி, லவ்லினா லிட்டில் பிளவர், தமிழ் துறை தலைவர் சித்ரா, பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முருகவேல் ஆகியோர் பங்கேற்றனர்.