ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் திரௌபதி நாடகம்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கோமல் தியேட்டரின் ‘திரௌபதி அக்னி புத்ரியின் சரித்திரம்’ என்ற நாடகம் கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. 

தாரிணி கோமல் இயக்கத்தில் நடந்த இந்த நாடகத்திற்கு பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி இசையமைக்க, கவிஞர் சதீஸ்குமார் வசனம் மற்றும் பாடலை இயற்றினார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் நிர்வாக இயக்குனர் எம்.கிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.