உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக சந்திரசூட் பொறுப்பேற்பு

உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக தனஞ்சய் ஒய்.சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார். இவர் முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட்டின் மகன் ஆவார்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பணிக்காலம் நிறைவடைந்ததையடுத்து புதிய தலைமை நீதிபதியாக தனஞ்சய் ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்றார். இவா் 2024 ஆம் ஆண்டு நவ.10-ஆம் தேதி வரை பதவி வகிப்பாா்.

பதவியேற்பு நிகழ்வில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, பியூஸ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.