ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பக்கவாதம் குறித்து உரையாடல்

உலக பக்கவாத தினத்தையொட்டி, “பக்கவாதம் அதிர வைக்கும் உண்மைகள்” என்ற தலைப்பில் பொதுமக்களுடன் ஓர் கலந்துரையாடல் நிகழ்ச்சி, அக்டோபர் 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை, கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெறுகிறது.

அதன் தொடர்ச்சியாக வரும் நவம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறும் முகாமில் 25 சதவீத கட்டணச் சலுகையில் சீரற்ற ரத்த சர்க்கரை அளவு, கிரியேட்டினின், சராசரி ரத்த சர்க்கரை அளவு, ஈசிஜி, எக்கோ கார்டியோகிராம், கரோடிட் வெட்டீபிரல் டாப்ளர், எம்.ஆர்.ஐ. ஸ்டோக் புரோக்கால் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். முகாமிற்கு வருபவர்கள் தங்களுடைய மருத்துவக் குறிப்புகள், மருந்து சீட்டுகள், காப்பீடு அட்டை ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.

தலைமை நரம்பியல் நிபுணர் டாக்டர் அசோகன், நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமாதாஸ், தலைமை நரம்பியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முரளி, நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் சிறுதுவார மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்ரம், நியூரோ மற்றும் வாஸ்குலர் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி நிபுணர் டாக்டர் முத்துராஜன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் எந்த காரணமும் இல்லாமல் திடீரென கடுமையான தலைவலி, ஒற்றைத் தலைவலி, திடீர் தலைச்சுற்றல், நடப்பதில் சிரமம், சமநிலை இழப்பு ஆகிய பாதிப்புகள் உள்ளவர்கள் பங்கேற்கலாம். 75020-33799, 89739-20000 ஆகிய செல்போன் எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இத்தகவலை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.