பரம்பிக்குளம் அணையின் மதகு சீர் அமைக்கும் பணி துவக்கம்

பரம்பிக்குளம் அணை மதகு சீர் அமைக்கும் பணி ரூ 7 கோடி 20 லட்சம் செலவில் துவக்கம், 50க்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் அணையில் உள்ள மூன்று மதகுகளில் நடுவில் இருந்த மதகு கடந்த மாதம் 20 ஆம் தேதி இரவு உடைப்பு ஏற்பட்டு கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்காக தேக்கிவைக்கப்பட்ட 6 டிஎம்சி தண்ணீர் கேரளா பாரத புழாவிற்க்கு சென்றது.

நீர் பாசன துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டு தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றார், அமைச்சர் முன்னிலையில் துறை சார்ந்த அதிகாரிகள் மத்தியில் ஆலோசனை நடத்தபட்டு தமிழக அரசு ரூ. 7 கோடி 20 லட்சம் ஒதுக்கியது.

மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு திருச்சியில் அணைக்கு மதகு தயாரிக்கும் பணியும், அணையில் மதகு பெருத்தப்படும் இடத்தில் பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

அணையின் நடுபகுதி சங்கலி இணைக்கும் பீம் 37 டன்னும் மதகு 40 டன் கொண்டது எனவும் தமிழகம் மற்றும் கேரளா பொதுபணி துறை அதிகாரிகளும் இணைத்து பணியாற்றி வருவதாகவும் மேலும் 30 நாட்களுக்குள் பணிகள் முழுமையாக முடிந்துவிடும். கோவை, திருப்பூர் மற்றும் கேரளா விவாசாயிகளுக்கு முறையாக விவசாய பாசனத்திற்க்கு உரிய நேரத்தில் நீர் வழங்கப்படும் என உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்தார்.