கே.பி.ஆர் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில், விநாயக சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி வரவேற்புரை வழங்கி சிறப்பித்தார். கல்லுரியின் செயலர் மற்றும் ஆலோசகர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார்.

இதில் பொள்ளாச்சி, ராகவேந்திரா இசைப் பள்ளி, பாமா பாலசுப்பிரமணியம் மற்றும் சோபானா ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். பாரம்பரிய முறைப்படி விநாயகர் சிலை வைத்து, விநாயகரின் துதி பாடலுடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு புல முதன்மையர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.