கோவையில் வரும் 30 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது.

இதன்படி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள இரண்டாம் தள கூட்ட அரங்கில் காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு தலைமை வகித்து நடத்த உள்ளார்.

கோவை மாவட்ட விவசாயிகள் இந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.