குடிநீர் குழாய்களை புதுப்பிக்க உத்தரவு

கோவை மாவட்டத்தில் தியாகி குமரன் வீதியில் குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து இன்று மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேயர் கல்பனா ஆய்வு செய்தபோது, குடிநீரில் கழிவு நீர் கலப்பதால், அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களை புதுப்பித்து விரைவாக குடிநீர் விநியோகம் செய்ய பொறியாளர்களுக்கு  உத்தரவிட்டார். அவருடன் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, உதவி ஆணையர் சங்கர், மாமன்ற உறுப்பினர் ஷர்மிளா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் இருந்தனர்.