இந்துஸ்தான் செவிலியர் கல்லூரியில் விளக்கேற்றும் விழா

இந்துஸ்தான் மருத்துவமனையில் உள்ள செவிலியர் கல்லூரியில் விளக்கேற்றும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில், இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சரஸ்வதி கண்ணையன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து, முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், சிறப்பு விருந்தினராக சுகாதார துணை இயக்குனர் அருணா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவிற்கு இந்துஸ்தான் மருத்துவமனையின் இயக்குனர் சதிஷ் பிரபு மற்றும் நிர்வாக அறங்காவலர் மற்றும் செயலாளர் பிரியா சதிஷ் பிரபு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன் மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார். கல்லூரி முதல்வர் மணிமொழி விழாவில் வரவேற்புரை நிகழ்த்தினார். சுகாதார அறிவியல் பட்ட படிப்பு கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் பாப்பாத்தி பிளாரென்ஸ் நைட்டிங்கேல் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி, செவிலிய மாணவ மாணவிகளை நைட்டிங்கேல் உறுதிமொழியை ஏற்க வைத்தார்.

கல்லூரி முதல்வர் மணிமொழி மற்றும் பேராசிரியர் ஆண்ட்ரியா செவிலிய மாணவர்களுக்கு விளக்கேற்றி செவிலியர்களின் சேவையை பாராட்டினர். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.