தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை

அரசின் உதவித்தொகையுடன் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் இசைபயில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்: இசைப் பயிற்சி படிப்பிற்கு அரிய வாய்ப்பாக கலைபண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கோவை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் மாணவர்கள் சேருவதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மூன்றாண்டுகள் பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு துறைகளில் இளங்கலை இசைப்பிரிவில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம் ஆகிய துறைகளில் சேர்வதற்கு +2 தேர்ச்சியுடன் 17 வயதிலிருந்து 22 வயது வரையிலும், பட்டயப் படிப்பு பிரிவில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம் மற்றும் தவில் ஆகிய துறைகளில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 16 வயதியிலிருந்து 21 வயது வரை இருக்கவேண்டும்.

ஓராண்டு இசை ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கு பி.ஏ. இசை அல்லது இசைக்கலைமணி பட்டயம் பெற்றிருப்பதுடன் 18 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும்

மாலைநேர இசைக்கல்லுாரியில் குரலிசை வீணை வயலின் போன்ற பிரிவுகளில் இரண்டாண்டு சான்றிதழ் படிப்பிற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 16 வயதிற்கு மேல் வயதுவரம்பு இல்லை.

மேற்காண் இசை படிப்புகளுக்கான கல்விக் கட்டண விவரம் (B.A) பி.ஏ. இசை வருடத்திற்கு ரூபாய் 1480 பட்டயம் (Diploma) மற்றும் இசைஆசிரியர் பயிற்சி வருடத்திற்கு ரூபாய் 750/- மாலைநேர இசைகல்லூரி வருடத்திற்கு ரூ.500/-ஆகும்.

மேலும் மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மாதந்தோறும் ரூ.500 வழங்கப்படும். இலவச பயண பேருந்து அட்டை வழங்கப்பட உள்ளது. விண்ணப்பம் வேண்டுவோர் www.artandCulture.tn.gov.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு முதல்வர் (பொ) தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மலுமிச்சம்பட்டி கோயம்புத்துர் – 641050 என்ற முகவரியிலோ அல்லது 0422-2611196 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.