அதிமுக உங்க பாட்டன் வீட்டு சொத்தா -ஆர்.பி.உதயகுமார் கேள்வி

அதிமுக என்ன உங்க பாட்டன் வீட்டு சொத்தா என, ஓ பன்னீர்செல்வத்திடம் ஆர்.பி.உதயகுமார் சரமாரியாக  கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது செயலாளராக கலந்து கொண்டார்.  அப்போது அக்கூட்டத்தை புறக்கணித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

அப்போது ஓ.பி.எஸ்  மற்றும் இ.பி.எஸ்  ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் 14 பேர்  கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர்.

ஓபிஎஸ் தரப்பில் இருந்து 200 பேர் மீதும்,  எடப்பாடி பழனிசாமி தரப்பில் 200 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கை  கருத்தில் கொண்டு அதிமுக அலுவலகத்திற்கு  வருவாய் துறையினரால்  சீல் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த வீடியோவில் ஓ.பன்னீர் செல்வத்தை நோக்கி பல கேள்விகளை எழுப்பி உள்ளார். “இப்படி இழி செயலில் நீங்கள் ஈடுபடுவீர்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.  அதிமுக என்ன உங்க பாட்டன் வீட்டு சொத்தா அல்லது உங்கள் சொத்தா?  எம்ஜிஆர், ஜெயலலிதா அம்மாவின் ஆன்மா உயிரோடு இருப்பதற்கான சாட்சி தான் அரியலூரில் நடந்த விபத்து” என்று கூறியுள்ளார்.