வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வெளியுறவுக் கொள்கை – அமைச்சர் முரளிதரன்

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பில் ‘பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின்  சகாப்தத்தில் இந்திய வெளியுறவுக் கொள்கையின் வெற்றி வரலாறு’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமையன்று  நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் முரளிதரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். மேலும்,  ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் தலைவர் மலர்விழி  நிகழ்விற்கு தலைமை தாங்கி வரப்பேற்புரையாற்றினார்.

இதுகுறித்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘வெளியுறவு துறை சார்ந்து பாஜக அரசால் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், உலக அளவில் இந்தியாவின் பெருமை வளர்ந்துள்ளதாகவும்’ தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, மத்திய இணை அமைச்சர் முரளிதரன், ‘உக்ரன் போர் சூழலிலும், ஏமன் நாட்டில் ஏற்பட்ட பதட்டமான காலங்களிலும், கோவிட் காலகட்டத்திலும் வெளிநாட்டில் வாழும்  இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு கொண்டு வருவதில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

எதிர்காலங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் வெளியுறவுத் துறையின் செயல்பாடுகள் அமையும்’ என, மாணவர்களிடம் தெரிவித்தார்.