ஹரிபவனத்தின் புதிய கிளை விரைவில் திறப்பு

கோவையில் 1971-ஆம் ஆண்டு முதல் அசைவம் மற்றும் சைவ உணவப் பிரியர்களுக்கு விருந்து படைத்து வருகிறது ஹோட்டல் ஹரியவனம். தனது 50-வது ஆண்டு பொன் விழாவினை கொண்டாடும் இந்த தருணத்தில், ஒரு புதிய கிளையினை வருகிற 10-ம் தேதி அவினாசியில் திறக்கிறது.

இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஹோட்டலின் நிர்வாக இயக்குனர் பாலச்சந்தர் ராஜு கூறுகையில், இந்த புதிய 7-வது கிளையானது திருப்பூர் – அவினாசி தேசிய நெடுஞ்சாலையில் சுட்ரீம் விஸ்டா காம்ப்ளக்ஸில் நவீன வசதிகளுடன் திறக்கப்படவுள்ளது என்றும் 50 – வது ஆண்டு பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஹோட்டல் ஹரிபவனம் நிறுவனர் எஸ்.ராஜு அவர்களின் திருவுருவச்சிலை திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், இந்த புதிய கிளையில் அசைவ மற்றும் சைவ உணவு வகைகளை வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் சாப்பிட ஏதுவாக குளிர்சாதன வசதி செய்யப்பட்ட உணவு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்றும், 25 பேர் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் தனிப்பட்ட டைனிங் ஹால் வசதியும் இங்கு உள்ளது என்றும் கூறினார்.

மேலும், வர்த்தகம் தொடர்பான சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மீட்டிங் ஹால், சிறிய அளவிலான விழாக்கள் நடத்துவதற்கு வசதியாக 50 நபர்கள் வரை அமரக்கூடிய மினி பேங்க்குவிட்  ஹால் வசதிகளும் இந்த அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் பூமராங் ஐஸ் கிரீம் பார்லர், கஃபே மற்றும் சாட், ஜூஸ், பேல் பூரி, பானி பூரி மற்றும் பல்வேறு ஸ்னாக்ஸ் வகைகளும், லைவ் பார்பிக்யூ, தந்தூரி கவுண்ட்டரும் இங்கு உள்ளது என தெரிவித்தார்.

அத்துடன் எலக்ட்ரிக்கல் வாகனங்களை ரீச்சார்ஜ் செய்வதற்கு வசதியாக சார்ஜிங் ஸ்டேஷன், பாலூட்டும் தாய்மார்களின் வசதியினை கருத்தில் கொண்டு பேபி கேர் ரூம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் 50-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.