இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கையில் நிலவும் வன்முறை காரணமாக பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் தீவிரமாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தினர். இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்தது. இதனைத்தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டதால் கலவரம் ஏற்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சே உட்பட ஆளும் கட்சியின் அரசியல் தலைவர்கள் 35 பேரின் குடியிருப்புகள் நெருப்பு வைத்து எரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள். எனவே, அங்கு பதற்ற நிலை நிலவுகிறது.

இந்நிலையில் இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெட்ரோல்,டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.