கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் மாதிரி நேர்முக தேர்வு

மத்திய அரசுப் பணியில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான இந்த வருடத்தின் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு நேர்முகத்தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவை கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாதிரி நேர்முக தேர்வு நடைபெற்றது.

இதில் கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் சிகாமணி, அதிகாரிகள் பெரியசாமி IRS, சக்திவேல் IRS, சுவாதி ஶ்ரீ IRS ஆகியோரைக் கொண்ட குழுவின் தலைமையில் மாதிரி நேர்காணல் நடைபெற்றது.

இந்த மாதிரி நேர்காணல் தேர்வில் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். 2022-2023 ஆம் ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.