ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் மன்ற விழா

கோவை வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் மன்ற விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் உமா தலைமையுரை நிகழ்த்தினார். ஒருங்கிணைப்பாளர் சாம்பசிவம் முன்னிலை உரை ஆற்றினார். தொடர்ந்து கல்லூரியின் முன்னாள் மாணவர் தமிழ் மணிகண்டன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘எண்ணுவது உயர்வு’ எனும் தலைப்பில் மாணவர்களிடையே நமது பிறப்பிற்க்குக் காரணமான பெற்றோர்களையும், அறிவுக் கண்ணைத் திறக்கும் ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும். நல்ல நண்பர்களுடன் பயணிக்க வேண்டும் என்றதுடன் தமிழ் இலக்கிய நயங்களையும் எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினார். விழாவில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். மேலும் நிகழ்வில் பல்வேறு மாணவர்களுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டன.