எஸ்.என்.எம்.வி கல்லூரியில் விளையாட்டு விழா

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு, கல்லூரியின் தலைவர் ரமேஷ் சி பாஃனா தலைமையேற்று, விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்.

தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய கல்லூரியின் முதல்வர் சுப்பிரமணி, வெற்றியோ தோல்வியோ பெரிதல்ல உங்களின் தொடர் முயற்சியே வெற்றியின் அடிப்படை என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் சேலம், விநாயகா மிஷன் உடற் கல்வி கல்லூரி முதல்வர் சரவணன் சிறப்புரை ஆற்றினார்.

அவர் கூறுகையில் விளையாட்டில் மட்டுமே சாதி மதம் கடந்த ஒற்றுமை நிலவுகிறது. அதனால் விளையாட்டு நாள் என்பது முக்கியமான ஒன்று. விளையாட்டில் இன்றைய வெற்றியாளர்கள் நாளைய சாதனையார்களாக மாறுகின்றனர் என்று கூறினார்.

இவ்விழாவில் மகளிர் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், மட்டைப்பந்து, சதுரங்கம், கால்பந்து, கைப்பந்து, கபடி, இறகு பந்து, குண்டெறிதல் போன்ற போட்டிகளும், பேராசிரியர்களுக்கு பந்து வீசுதல், இறகுபந்து, மட்டைப்பந்து, குண்டெறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.