ஆர்.வி.எஸ். கல்லூரியில் வளாக நேர்காணல்

சூலூர் ஆர்.வி.எஸ். கல்வியியல் கல்லூரியில் பி.எட். மற்றும் எம்.எட். இரண்டாமாண்டு பயிலும் மாணாக்கருக்கு வளாக நேர்காணல் சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோவை மாவட்டதிலுள்ள ஸ்ரீ சைதன்யா சர்வதேச பள்ளி, அனுக்கிரகா மந்திர் சி.பி.எஸ்.சி பள்ளி, வெஸ்ட் பார்க் சர்வதேச பள்ளி, ஆதித்யா சர்வதேச பள்ளி, பெரியநாயகியம்மன் பதின்மப்பள்ளி, லிட்ரசி மிஷன் பதின்மப்பள்ளி, கிரசன்ட் பதின்மப்பள்ளி, யங் இந்தியா பொதுப்பள்ளி, என 10 க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்று தங்கள் பள்ளிக்குக் தேவையான ஆசிரியர்களை தேர்வு செய்தனர்.

வளாக நேர்காணலுக்கு வருகைபுரிந்த பள்ளிகளின் நிர்வாகிகளையும், முதல்வர்களையும் கல்லூரியின் முதல்வர் ஜெயஸ்ரீ ராணி வரவேற்றார்.

பி.எட். மற்றும் எம்.எட். இரண்டாமாண்டு பயிலும் 140 க்கும் மேற்பட்ட மாணவ ஆசிரியர்கள் இந்நேர்காணலில் பங்கேற்றனர்.