ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும், ஹைதராபாத் நாந்தி பவுண்டேசனும் இணைந்து அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவியரது வேலைவாய்ப்புக்குத் தேவையான மென்திறன்கள் மற்றும் தகுதிகளை வளர்ப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி மற்றும் நாந்தி பவுண்டேஷனின் முதன்மை திறன் அலுவலர் ராதா வரதராஜன் ஆகியோர் கையெழுத்திட்டனர். கல்லூரி முதல்வர் சித்ரா மற்றும் நாந்தி பவுண்டேஷனின் செயலாக்கப் பிரிவின் மூத்த மேலாளர் ஆனந்தி அரவிந்த் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.