ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் ‘நான் முதல்வன்’ காணொளி நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் நான் முதல்வன் – உலகை வெல்லும் இளைய தமிழகம் திட்டத்தின் நிகழ்ச்சி, காணொளி மூலம் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

தமிழக முதல்வரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு இன்று இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வரின் சிறப்புரையை மாணவர்கள் கேட்டனர்

மாணவர்களின் தொழில் திறமையை உயர்த்தும் முதல்வரின் பேச்சு மாணவர்களை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக “இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் தொழில் திறமையை வளர்த்து தொழில் நிறுவனங்களை ஆரம்பித்து என்னிடம் கூறினால், அதுதான் எனக்கு நீங்கள் அளிக்கும் பிறந்த தின பரிசு ஆகும்” என்ற முதல்வரின் பேச்சு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதில் இக்கல்லூரியின் முதல்வர் ஜேனட், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் கலந்துகொண்டனர். இதில் மொத்தம் 3400 மாணவ-மாணவியர்கள் பங்கேற்றனர்.