தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளமறிவியல் பட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற பிப்ரவரி மாதம் 11ம் நாள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாகக்காரணங்களினால் 2021-2022 ஆம் ஆண்டிற்கான இளமறிவியல் பட்டப்படிப்பு கலந்தாவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று முதன்மையர் வேளாண்மை மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.