சிலம்பத்தில் தங்கம் வென்ற ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவி

பதினெட்டாவது மாநில அளவிலான சிலம்பக்கலைப் போட்டிகள் அண்மையில் கன்னியாகுமரியில் நடைபெற்றன. அகில இந்திய சிலம்பக்கலைக் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் தமிழ்நாடு முழுவதும் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அதில் குத்துவரிசைப் போட்டியில் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு பிபிஏ சிஏ பயிலும் மாணவி மிருதுளா மாநில அளவில் முதலாவதாக வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார்.

பரிசு பெற்ற மாணவியைப் பாராட்டிய கல்லூரி முதல்வர் சித்ரா, தற்காலத்தில் பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றோடு தற்காப்புக்கலையிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டியது அத்தியாவசியமானது. எனவேதான் எங்கள் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்புக் கலைகளையும் கற்றுக் கொடுத்து வருகிறோம் என்று கூறியதோடு தங்கப்பதக்கத்தை வென்ற மாணவியையும் வெகுவாகப் பாராட்டினார். மேலும் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் மாணவியை வாழ்த்தினர்.