கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி, தேசிய சேவை திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் ஆகியவை, ரோட்ராக்ட் கிளப் ஆஃப் சென்ட்ரல், ஐ.வி.ஆர்.சி.எல், மற்றும் உயிர் கிளப் உடன் இணைந்து “ஜீவன் ரக்ஷா” என்ற திட்டத்தின் கீழ் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தன.

கணியூர் சுங்கச்சாவடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, வாகனங்களின் முகப்பு விளக்குகளில் ஆண்டிகிளேர் ஸ்டிக்கர் ஒட்டுதல் மற்றும் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர்கள் சாலை பாதுகாப்பு பதாகைகள் ஏந்தி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சி கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமியின்  வழிகாட்டுதலில் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் முதல்வர் அகிலா தலைமையில் நடைபெற்றது.