வாலிபரோடு 24 மணி நேரம் சுற்றும் அப்பு என்ற அணில்

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரி (வயது 32). ஐடி ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் அடிபட்ட நிலையில் குட்டி அணி ஒன்று வந்துள்ளது. இந்த அணிலை எடுத்த ஹரி தினமும் உணவளித்து வளர்த்து வந்தார். அதற்கு அப்பு என்னும் பெயர் சூட்டினார். ஹரி செல்லும் இடங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் அவருடனே அணில் பயணித்து வருகிறது. கடந்த 8 மாத காலமாக ஹரியுடன் அணில் செல்லுமிடங்களில் எல்லாம் சுற்றி வருவதால், அணிலையும் ஹரியையும் பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.