அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள கோவை மாவட்ட மாணவ மாணவிகளை அழைத்து மாவட்ட ஆட்சியர் சமீரன் பாராட்டுகளை தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில்  அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுவேதா, யுவன்ராஜ், சுருதி, அபர்ணா, தேவி, ஆஃரின் ஜெகன், தர்சினி, பூர்ணிமா, சங்கீதா, சந்திரதேவி ஆகிய மாணவ மாணவிகளையும் பள்ளி ஆசிரியர்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் உயர்கல்வி குறித்து சிறிது நேரம் உரையாடினார். இது போன்று மாவட்ட ஆட்சியர் தங்களை அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அம்மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.