அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் : வடவள்ளி மக்களுக்கு உறுதி அளித்த அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர்

கோவையில் 38வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஷர்மிளா சந்திரசேகர் இன்று தனது வார்டுக்கு உட்பட்ட வடவள்ளி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கோவை மாநகராட்சி 38வது வார்டில் அதிமுக சார்பில் டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த சூழலில், அவர் ஒன்று காலை தனது வார்டுக்கு உட்பட்ட வடவள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் கொடுத்து தனக்கு ஆதரவு திரட்டினார். மேலும், தனக்கு வாக்களித்தால் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும், இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். பிரச்சரத்தின் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.