காட்டு யானையை “போ சாமி போ” என அன்பாக சொல்லும் பழங்குடியின மக்கள் – வைரலாகி வரும் வீடியோ

கோவை மாவட்டம் ஆனைகட்டிக்கு நேற்று மாலை கோவையில் இருந்து சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று தூமனூர் பிரிவு அருகே பேருந்து சென்றுகொண்டிருக்கும் போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை பேருந்தை பார்த்தது ஆவேசமாக ஓடி வந்து தாக்க முயன்றதுள்ளது. அப்போது பேருந்தில் இருந்த சில பழங்குடியின மக்கள் யானையை பார்த்து போ போ போ சாமி  என சத்தமிட அந்த யானை அமைதியாக வனப்பகுதிக்குள் திரும்பி சென்றுள்ளது.

 

இதனை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.