சரவணம்பட்டி 21 வது வார்டில் திமுக சார்பில் மனு தாக்கல்

கோவை சரவணம்பட்டி பகுதியில் திமுக சார்பில் 21 வது வார்டில் போட்டியிடும் பூங்கொடி சோமசுந்தரம் நேற்று மனு தாக்கல் செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வந்தனர். தொடர்ந்து கோவை மாநகராட்சி பகுதியில் 100வார்டுகளுக்கும் தனி தனியாக கட்சி நிர்வாகிகளும், சுயேட்சையாகவும் போட்டியெடுகின்றன.

அந்த வகையில்கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் நேற்று கோவை சரவணம்பட்டி, 21 வது வார்டில், போட்டியிடும் திமுக வேட்பாளர் பூங்கொடி சோமசுந்தரம்,வேட்புமனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 15 ஆண்டுகளாக கட்சி பணியில் ஈடுபட்டு வருகின்றதாவும், சரவணம்பட்டி 21வது வார்டு பகுதிகளில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக அந்த பகுதிகளில் சாலை வசதி, தெருவிளக்குகள், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என தெரிவித்தார்.

மனு தாக்கலின் போது திமுக வட்ட கழக செயலாளர் வசந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜ், சோமசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.