உலகத் திருக்குறள் மாநாடு – 2022 நிகழ்ச்சியில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி கடந்த 30 ஆண்டுகளாக தரமான மருத்துவத்தை சிறப்பான முறையில் மக்களுக்கு வழங்கிவருவதை கௌரவிக்கும் வகையில் “உலகத் திருக்குறள் மாநாடு 2022” நிகழ்ச்சியில் 2022-ஆம் ஆண்டிற்கான குறள் மலை வாழ்நாள் சாதனையாளர் விருதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களால் வழங்கப்பட்டது. இந்த விருதினை மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சிவகுமரன் பெற்றுக்கொண்டார்.