நேரு பொறியியல் கல்லூரி நூலகருக்கு ‘சிறந்த நூலகர் விருது’

புதுச்சேரி தமிழ்ச்சங்கம் மஹாலில் உலக கவிஞர்கள் சங்கமம் சார்பில் பாரத பிரதமரான கவிஞர் வாஜ்பாய் என்ற தலைப்பில் சமீபத்தில் கவிதை போட்டி நடைபெற்றது.

தமிழகம் மற்றும் புதுவை மாநில அளவிலான கவிதை போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசையும் 2021 சிறந்த நூலகர் விருதையும் நேரு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி நூலகர் செந்தில்குமார் பெற்றுள்ளார்.

விழாவிற்கு புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன், உள்துறை மற்றும் கல்விதுறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் இணைந்து பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.